மலேசியத் தமிழ் வலைபதிவாளர்களின் கலந்துரையாடல் கடந்த ஞாயிறன்று இனிதே நடந்தேறியது. அந்த கலந்துரையாடலின் சில புகைப்படங்கள் இதோ...
இந்த கலந்துரையாடலில் எனது பங்களிப்ப்பு குறைவாகவே இருந்தாலும் இங்கு நடந்தவற்றை மிகவும் அமைதியாக அமர்ந்து செவிமடுதுக்கொண்டிருந்தேன். அவற்றில் சில...
முதலில் தமிழ் வலைபதிவாளர்களின் வருகை. இந்த கூற்று மிகவும் வருத்ததிர்கூரியது. காரணம் இங்கு வருகை தந்த வலைபதிவாளர்கள் நூறில் ஒருபங்கு கூடி அல்ல... இதற்கு முன்பு நான் மற்ற இனத்தவர்களின் வலைபதிவாளர் கலந்துரையாடலுக்கு சென்டிருக்கிறேன், அங்கெல்லாம் நூற்றுக்கணக்கானவர்களை காணலாம் ஆனால் இங்கு விரல்விட்டு எண்ணக்கூடியேவர்களே இருந்தனர். அதிலும் இளைஞர்கள் ஒரு சிலர். இது இளைஞர்களின் பங்களிப்பை மிகவும் மோசமாக சுட்டிக்காட்டுகிறது. எங்கே மற்ற தமிழர்கள் ????
அடுத்து இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களின் காலதமதின்மை.. வெளியில் நடக்கும் விருந்து போன்ற காரியங்களுக்குதான் காலதாமதம் என்றால் தமிழோடு நடக்கும் இந்த கலந்துரையாடலுக்கும் அதே காரணம். நான் யாரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை மாறாக பொதுவாக சொல்கிறேன். தயவு செய்து அடுத்தே தடவை இவைகளை திருத்திக்கொள்ளுங்கள். எப்பொழுது நாம் இந்த பழக்கத்தை மாற்றுகின்றமோ அன்றுதான் தமிழர் சமுகமாகிய நாம் மேன்மை நிலைக்கு வர முடியும்.
மற்றபடி இந்த கலந்துரையாடலில் பேசியே கூற்றுகள் அனைத்தும் வரவேற்க கூடியவைதான். மேலும் இந்த கலந்துரையாடலில் கலந்துரையாடிய கருத்துக்களை வாசிக்க இங்கே சொடுக்கவும் :
பதிப்புரிமை : சுரேஷ் காளியண்ணன்
0 Responses to 'மலேசியத் தமிழ் வலைப்பதிவர் கலந்துரையாடல்'
Post a Comment